கச்சதீவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருள்கள் மீட்பு!

இந்தியாவில் இருந்து கச்சத்தீவிற்கு படகு மூலம் கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பெருமளவிலான வெடிபொருட்கள் இவ்வாறு இன்று காலை மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் கடற்படையினர் கச்சத்தீவினை முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது இந்தியாவில் இருந்து படகு மூலம் கொண்டுவரப்பட்ட சண்90 ரக 508 வெடிகுச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.